×

நீரவ் மோடியை நாடு கடத்த கோரிய வழக்கு செப்.7க்கு ஒத்திவைப்பு

லண்டன்:  குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்காக சிபிஐ.யும் அமலாக்கத் துறையும் அங்குள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.அவர்   அங்கு கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு கடந்த 5 நாட்களாக  விசாரிக்கப்பட்டு வந்தது. கடைசி நாளான நேற்று, அவருக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்பித்தது. .பின்னர்,  வழக்கு செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Nirav Modi , Famous Diamond Dealer, Neerav Modi, Gujarat
× RELATED வங்கி மோசடியாளர்களுடன் மோடி...