×

ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பு: இன்ஜினியர் தற்கொலை

சென்னை: சீர்காழியை சேர்ந்தவர் மணிமாறன்(27). சிவில் இன்ஜினியரான இவர், சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். ஊரடங்கால் வேலையிழந்த மணிமாறன் உணவு வாங்க கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார். அவர் பணியாற்றிய நிறுவனம் மீண்டும் வேலை வழங்காததாலும், சொந்த ஊர் செல்ல முடியாததாலும் மனஉளைச்சலில் இருந்த மணிமாறன் நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த எம்ஜிஆர் நகர் போலீசார், மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Loss , Curfew, unemployment, engineer suicide
× RELATED ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20%...