×

திண்டுக்கல் ஜி.ஹெச்சில் திடீர் மாயம்: ‘சாப்பிடாமல் வந்திட்டேங்க... அதான் டீ குடிக்க போனேன்...’கொரோனோ நோயாளி ‘கூல்’ பதில்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி திடீரென மாயமானார். தேடி கண்டுபிடித்தபோது, டீ குடிக்க வெளியே  சென்றதாக கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு அருகே சிங்காரக்கோட்டை பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு சின்னாளபட்டி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை திடீரென காணவில்லை. இதனால் மருத்துவமனையே பரபரப்பானது. பின்னர் சிறிதுநேரம் கழித்து சுகாதார ஆய்வாளர்கள் அவரை  தேடிப்பிடித்து அழைத்து வந்தனர்.  அவரிடம் விசாரித்ததில், ‘‘சாப்பிடாமல் வந்ததால் பசித்தது. அதான் டீ குடிக்க வெளியே சென்றேன்’’ என கூலாக  கூறினார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

Tags : Dindigul GH ,Dindigul ,patient , Dindigul, GH, Corono patient, curfew
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...