நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. உலர் சாம்பல் சரிந்து விழுந்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த போது தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் கடந்த வாரம் பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.