×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.35,776க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்களிடையே தேவை அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்வு காணப்படுகிறது. நேற்று விலை குறைந்திருந்தது. சென்னையில் இன்று (மே 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,443 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் உயர்ந்து 35,776 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.46.60 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 46,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Sovereigns ,Chennai ,Rs , Jewelry, Gold, Price, Shaving, Sale
× RELATED ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.6.32 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும்படை நடவடிக்கை