சென்னை: சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கேரளாவைப் போன்று கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்கவும் தயாராக இல்லை. கொரோனா ஊடரங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக்கவும், தொழிலாளர் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு செல்லாதாக்கவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கவுமான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதைக்கண்டித்து சிஐடியு சார்பில் 14.5.2020 (இன்று) மாநிலம் முழுவதும் சங்க அலுவலகங்கள், தொழிலாளர் வசிக்கும் தெருக்கள், வேலைக்குச் செல்வதற்கான பிக்அப் நிறுத்தங்கள் மற்றும் ஆலை வாயில்கள் முன்பு நடைபெறவுள்ள ஐந்து நிமிட ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.