×

ராதாரவிக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு காரில் சென்றுள்ளார் நடிகர் ராதாரவி. ராதாரவி கோத்தகிரி வந்த தகவல் கிடைத்ததும், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அவரை சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த பங்களாவில் 8 பேர் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தான் வந்ததற்கான அனுமதி சீட்டை ராதாரவி காண்பித்துள்ளார். என்றாலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்ற அதிகாரிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து குடும்பத்துடன் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். வீட்டை விட்டு 14 நாட்களுக்கு வெளியில் வரக்கூடாது என்று ராதாரவியை அறிவுறுத்தினார்கள். பின்னர் அவர்  தங்கி இருந்த பங்களாவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதற்கான நோட்டீசையும் பங்களா சுவற்றில் ஒட்டினார்கள்.

Tags : Corona , Corona test , Radhavi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...