×

கரென்ட் கட்டணத்த தள்ளுபடி செய்யுங்க! யோகிக்கு பிரியங்கா கடிதம்

புதுடெல்லி: `விவசாயிகளுக்கு 4 மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் பிஷத் கடந்த ஏப்ரல் 20ம் தேதி மரணம் அடைந்தார்.அவரது மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆதித்யநாத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். ்அதில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சில கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

தனது கடிதத்தில் பிரியங்கா, ‘ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கான 4 மாத  கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கம்பளி, ஜவுளி போன்ற சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.



Tags : Yogi ,Priyanka , Current charges, Corona, curfew, Yogi, Priyanka, letter
× RELATED நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென...