சென்னை: மே 17- தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலால் அமளிப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது 49 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17-ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே நாளை சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.