×

மனதை உருக்கும் வீடியோ: தருமபுரி அருகே ஒரு சொட்டு நீருக்காக அலைமோதுவதும் குரங்குகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தாக்கத்தால் தவிக்கும் குரங்குகள் ஒரு சொட்டு நீருக்காக அலைமோதுவது பார்ப்பவர்கள் மனதை உருக்குவதாக உள்ளது. தீர்த்தமலை கிராமத்தில் தீர்த்தமலை மீது அமைந்துள்ள தீர்த்த கிரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் நீல பாதையில் ஏராளமான குரங்குகள் தங்கியுள்ளன. வறட்சி காரணமாக மலையில் உள்ள தீர்த்தங்களில் தண்ணீர் குறைந்து விட்டதால் தாக்கத்தில் தவிக்கும் குரங்குகள் குழாய்களில் தண்ணீர் சொட்டுமா?  என்று பார்ப்பதை வேலையாக கொண்டுள்ளன.

அந்த வழியாக வருபவர்களிடம் கெஞ்சாத குறையாக பாட்டில்களில் இருந்து தண்ணீரை வாங்கி குடிக்கின்றன. ராவணனை வதம் செய்த தோஷம் நீங்குவதற்காக இந்த மலையில் தீர்த்தம் உண்டாக்கி ஈஸ்வரனை ராமன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த பெருமை உடைய தளத்தில் தண்ணீருக்காக குழாய்களை கையால் அடைத்துக் கொள்ளும் குரங்குகளுக்கு இடையே மோதலும் ஏற்படுகிறது. எனவே குரங்குகள் குடிப்பதற்காக தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Dharmapuri , Dharmapuri, water, monkeys
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...