சிங்கப்பூர்: ஊராடங்கால் சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் வேலை இழந்துவிட்டதால் நாடு திரும்ப தயாராக உள்ளனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை, திருச்சிக்கு ஒரு சிறப்பு விமானம் கூட இயக்கப்படாததால் தமிழர்கள் வரமுடியவில்லை. இளைஞர்கள் மட்டுமின்றி, கர்ப்பிணிகள், முதியோர் பலரும் இந்தியா திரும்பக் காத்து கொண்டு உள்ளனர். 12 நாடுகளுக்கு மத்திய அரசு இயக்கிய 64 விமானங்களில் ஓன்று கூட சிங்கப்பூர் தமிழர்களுக்காக அனுப்பப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.