×

மாஸ்க் அணியாமல் குதிரையில் சுற்றியபாஜ எம்எல்ஏ மகன்

சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டல்பேட்டை தொகுதி பாஜ எம்எல்ஏ  நிரஞ்சன் குமாரின் மகன் புவன் குமார். கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், இவர் மட்டும்  முகக்கவசம் அணியாமல் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில்  குதிரையில்  வலம் வந்துள்ளார். இதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  வெளியிட்டுள்ளார். இது வைரலாகி இருக்கிறது. வீடியோவை வெளியிட்ட அந்த நபர் ‘சிவப்பு  மண்டலத்தில் உள்ளவர்கள் ஊரடங்கு அமலில் இருக்கும்போது பைக், கார் உள்ளிட்ட  வாகனங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து இருக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள்  ஒரு எம்எல்ஏ.வின் மகனாக இருப்பதால் உங்களால் தேசிய நெடுஞ்சாலையில் மாஸ்க்  அணியாமல் குதிரையில் வலம் வர முடிகிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த  வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் ஊரடங்கு விதிகளை மீறிய எம்எல்ஏ  மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : BJP , Mask, Horse, BJP MLA's son
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...