டெல்லி: வந்தே பாரத் மிஷன் மூலம் 31 ஏர்இந்தியா விமானங்களில் 6037 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான போக்குவரத்து துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.