×

கேரளாவில் 14 வரை கனமழை: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 14ம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. வரும் 14ம் தேதிவரை பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (13ம்) தேதி வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும், 14ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சில இடங்களில் வரும் 14ம் தேதி வரை இடி, மின்னல்களுடன் கூடிய மழையும், மேலும் சில இடங்களில் பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா படுத்திவரும் நிலையில் கனமழை எச்சரிக்கை பொதுமக்களை கலங்கடித்துள்ளது.


Tags : Kerala , Kerala, Heavy Rain, 5 Districts, Yellow
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...