திருப்போரூர்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர். திருப்போரூர் நகர தி.மு.க. சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் 1, 2 ஆவது வார்டுகளைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்போரூர் நகர தி.மு.க. செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் 350 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் பரசுராமன், மோகன், வழக்கறிஞர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.