காஞ்சிபுரம்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் கராத்தே ராயப்பன் தலைமை தாங்கினார்.
கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் கூரம் செல்வம் வரவேற்றார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் தனசேகரன் நத்தப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பரணிமாரி, நகர தலைவர் சத்யா, நகர துணை செயலாளர் ஜே.ஆர்.சத்யா, சங்கர். ஆதி, விக்னேஸ்வரன், லாரன்ஸ், அஜித், அன்பு, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.