×

திமுக சார்பில் 2500 பேருக்கு நிவாரணம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 2500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கிராமப்புற மக்கள் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாவூர்,தொள்ளாழி , நத்தாநல்லூர் ஆகியஊராட்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.

 இதில் உள்ளாவூர், தொள்ளாழி, நத்தாநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 2500 குடும்பங்களுக்கு  அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர்  வழங்கினர். நத்தாநல்லூர் முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் அமலிசுதா முனுசாமி உட்பட மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : persons ,DMK , DM, relief, corona, curfew
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...