டெல்லி: தமிழக அரசு தொடர்ந்த டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை இல்லை. உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற இருந்த பட்டியல் முழுவதும் நீக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்புக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. சென்னையில் உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.