×

நெய்வேலியில் பாய்லர் வெடித்ததால் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, ரூ.25 லட்சம் நிவாரணம்: என்எல்சி நிறுவனம் அறிவிப்பு

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2 ஆவது அலகில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சிக்கி ஒரு நிரந்தர தொழிலாளி மற்றும் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் என 8 தொழிலாளார்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி நிரந்தர பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் நேற்று கொளிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். இதன் காரணமாக உரிய இழப்பீடு வழங்கக்கோரி 2ம் அனல்மின் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், உறவினர்களுடன் அனல்மின் நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்தவித உடன்படும் எட்டாத நிலையில் மீண்டும் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாக என்எல்சி உறுதி அளித்தது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் பணமும் தருவதாக உறுதியளித்தது. என்எல்சி- நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : survivors ,Boiler explosion ,deceased ,Neyveli ,NLC NLC , Neyveli, boiler, explosion, casualties, family, employment, Rs 25 lakh, relief, NLC, company, announcement
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...