சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வழங்கிய ரூ.1 கோடியை ஏற்க அரசு மறுத்துவிட்டது என கே.எஸ்.அழகிரி கூறினார். வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்களை ரயிலில் அழைத்துவர ரூ.1 கோடி வழங்க முன்வந்தோம். காங்கிரஸ் வழங்கிய பணத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.