ஹைதராபாத்: வந்தே பாரத் மிஷன் மூலம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 118 இந்தியர்கள் ஹைதராபாத் நகருக்கு வந்தடைந்தனர். வந்தே பாரத் மிஷன் எனும் திட்டத்தில் கீழ் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏர்இந்தியா விமானம் AI 1617 விமானம் மூலம் 118 இந்தியர்கள் ஹைதராபாத் வந்தனர். ஹைதராபாத் வந்த 118 பேரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.