×

கும்பகோணம் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து காய்கறி அங்காடி மூடல்

கும்பகோணம்: கும்பகோணம் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து காய்கறி அங்காடி மூடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று திரும்பிய போது ஓட்டுனருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஓட்டுனருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கும்பகோணம் காய்கறி அங்காடி மூடப்பட்டது. அங்காடி மூடப்பட்டதால் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : store closing ,Corona ,truck driver ,accident ,Kumbakonam ,vegetable store , Kumbakonam, truck driver, corona, vegetable store, closure
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...