கும்பகோணம்: கும்பகோணம் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து காய்கறி அங்காடி மூடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று திரும்பிய போது ஓட்டுனருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஓட்டுனருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கும்பகோணம் காய்கறி அங்காடி மூடப்பட்டது. அங்காடி மூடப்பட்டதால் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.