×

திருவிக நகர் மண்டலத்தில் பிரசவித்த தாய் உட்பட 33 பேருக்கு கொரோனா

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்றுக்கு நேற்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. உடனடியாக குழந்தைக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தைக்கு நோய் தொற்று ஏதும் இல்லை, என்பது தெரிந்தது. ஆனால், தாய்க்கு நடத்திய சோதனையில், நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.இதேபோல், புளியந்தோப்பு பகுதியில் 8 பேருக்கும், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் 2 பேருக்கும், ஓட்டேரி பகுதியில் 7 பேருக்கும், திருவிக நகர் பகுதியில் ஒருவருக்கும், பெரவள்ளூர் பகுதியில் 29 வயது ரயில்வே பாதுகாப்பு படை  வீரருக்கும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 3 பேருக்கும் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,city ,Travancore. , Trivik Nagar Zone, Corona
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு