×

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: தமிழக அரசுக்கு ரஜினி எச்சரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் நேற்று வெzளியிட்ட பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என்று, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Rajini ,Tamil Nadu ,government , Task shops, Re-rule, Tamil Nadu Government, Rajini
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...