புதுடெல்லி: டெல்லியின் வாசிர்பூர் அருகே உள்ள பகுதியை மையமாக கொண்டு பூமியில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக மத்திய அமைச்சகத்தின் புவி அறிவியியல் துறை தலைவர் ஜே எல் கவுதம் தெரிவித்தார். மேலும், இதேபோன்று கடந்த மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் முறையே ரிக்டர் அளவுகோலில் 3.5 மற்றும் 2.7 என்கிற அளவில் இதே பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிப்புகள் எதுவும் இல்லை.