×

உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு!... தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்ற நிலையில், மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார்.கொரோனா அச்சம் காரணமாக, கோலாகலமான கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் அன்னையர் தினத்தை உலகமெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களது அன்னையர் தின வாழ்த்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது! என பதிவிட்டிருக்கிறார்.

Tags : Mr. ,MK Stalin ,Dayalu ,Mulla Stalin , Mother, Dayaloo, Mother, Asi, MK Stalin, tweet
× RELATED முருங்கப்பட்டியில் வேளாண் கல்லூரி...