சென்னை: உயிரின் கரு, உணர்வின் திரு, வாழ்வின் உரு, வளர்ச்சியின் எரு, எல்லாம் சேர்ந்தவள் அன்னை, இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது. என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.