சென்னை :சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டியதால் 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமானது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 501 பேர் குணம் அடைந்துள்ளனர். 2786 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மண்டல வாரியான விவரம் பின்வருமாறு..
ராயபுரம் – 571 ,
கோடம்பாக்கம் – 563,
திரு.வி.க நகரில் – 519,
தேனாம்பேட்டை – 360,
வளசரவாக்கம்- 274,
அண்ணா நகர் – 248,
தண்டையார் பேட்டை – 231,
அம்பத்தூர் – 167,
அடையாறு – 159,
திருவொற்றியூர் – 64,
மாதவரம் – 46,
பெருங்குடி – 35,
சோளிங்கநல்லூர் – 25,
ஆலந்தூர் – 25,
மணலி – 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.