டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி மூலம் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுடா ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்கே பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.