கொரோனாவால் பல வளர்ந்த நாடுகளைப்போல் இந்தியாவில் மிகவும் மோசமான நிலை உருவாகும் என்று கணிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் அதன்மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பது உறுதி. அதற்கு தமிழக முதல்வரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்.
மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக பறித்துக்கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. -பாமக நிறுவனர் ராமதாஸ்
கொரோனா பரவிய நெருக்கடி நேரத்தில் மவுனமாக இருந்துவிட்டு, அமித்ஷா இப்போது பொய்மூட்டைகளால் மக்களை தவறாக வழி நடத்துகிறார். - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி