மாலத்தீவு: மாலத்தீவுகளில் சிக்கி தவித்த 698 இந்தியர்களை கப்பல் மூலம் அழைத்து வரும் சமுத்துரா சேது ஆப்பரேஷன் தொடங்கியது. பயணிகள் கப்பலுக்கு துணையாக INS Jalashwa என்ற போர்க்கப்பல் வருவதாக இந்திய கப்பல்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா வரும் 698 பேரும் கொச்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அனைவரும் கொரோனா சோதனைக்கு உப்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.