சென்னை: சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் கோயம்பேடு சென்று வந்ததாக கூறி வியாபாரிகள் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி அதிகாரிகள் அழைத்துச் சென்று மண்டபத்தில் அடைத்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மண்டபத்தில் அவதிப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.