சென்னை: டாஸ்மாக் திறப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கக் கோரி மகளிர் ஆணையம் சார்பில் லட்சமி மணியரசனும், மக்கள் அதிகாரம் சார்பில் மகாலக்ஷ்மி என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.