சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். மணிக்கு 30-40 கி,மீ, வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.