×

தூத்துக்குடியில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். தூத்துக்குடி அண்ணாநகர் 2வது தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(47). இவருக்கு பொன்இசக்கி என்ற மனைவியும் கணேசன், விக்னேஷ் என்ற மகன்களும், செல்வக்கனி என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாஹிர் என்பவரிடம் மின்வாரிய போன் நம்பரை கேட்டுள்ளார். அப்போது சரவணன் மதுபோதையில் இருந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜாஹிர், அவரது மனைவி, நண்பர் அருண் மற்றும் சிலர் சேர்ந்து சரவணனை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இரவு சரவணன் டூவிபுரம் 2வது தெருவில் உள்ள தனது நண்பரின் வணிக வளாக மாடியில் தூங்கச் சென்றார். ஆனால் காலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை தேடியபோது மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். தகவலறிந்த டவுன் டிஎஸ்பி பிரகாஷ், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், எஸ்ஐகள் சங்கர், காமராஜ், ரோடாபாய் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உடலில் லேசான காயங்கள் இருந்தன. இதுகுறித்து சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் சரவணன் அளவுக்கதிகமாக மதுகுடித்ததும், அதனால் விழுந்து இறந்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து விசாரணைக்காக பிடித்து வைத்திருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Tuticorin , Too much, alcohol , Tuticorin worker dies
× RELATED தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி