×

சில்லி பாயிண்ட்…

* கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை தீரும் வரை ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியாது. உலக கோப்பை மட்டுமல்ல வேறு எந்த கிரிக்கெட் தொடருக்கும் இதே நிலை தான். வீரர்கள் களமிறங்குவதற்கு முன்பாக இரண்டு வார தனிமைப்படுத்தல் அவசியம் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
* சச்சின், டிராவிட் இருவரும் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நெருக்கடியில் இருந்து மீள உதவியுள்ளனர். அவர்களின் அனுபவ ஆலோசனைகளே எனது வெற்றிக்கு காரணம் என்று இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் ரகானே நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
* ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகளைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பின்னர் அதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. வீரர்கள் முழு உத்வேகத்துடன் விளையாடினாலும், ரசிகர்கள் முன்பாக நிகழும் மாயாஜால தருணங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
* டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
* வீட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான வசதி இல்லாததால் பயிற்சி செய்ய வழியே இல்லை என்று நட்சத்திர வீரர் சரத் கமல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
* சக வீராங்கனைகளுடன் களத்தில் இறங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கூறியுள்ளார்.

Tags : ICC World Cup , Will the ICC World Cup T20
× RELATED சில்லி பாயின்ட்…