×

சென்னை மற்றும் புறநகரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40 ஆனது

சென்னை: ராஜிவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ெகாரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ெகாரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவள்ளூரை சேர்ந்த 56 வயது பெண் கடந்த 1ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 48 வயது பெண் ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது.

 இந்நிலையில் சென்னையில் முதல் முறையாக கொரோனாவுக்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஒருவர் பலியாகி உள்ளார். அதேபோன்று தாம்பரம் பகுதியை சேர்ந்த  77 வயது முதியவர் கொரோனாவுக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை  ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டிக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல் வந்துள்ளது.  இதையடுத்து அவருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மூதாட்டி,  திருவேற்காடு  அடுத்த வேலப்பன் சாவடியில் ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தமிழகத்தில் ெகாரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.



Tags : Tamil Nadu ,suburbs ,Chennai , Chennai, Corona, Tamil Nadu
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...