×

செஞ்சுரியை நெருங்கும் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 96 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்து, சதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் ஒருவர் இறந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் 1, மாங்காட்டில் 2, குன்றத்தூரில் 5 என மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் 1,  பாதிக்கப்பட்டவர்கள் 96, சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 84 ஆகவும் மாறியுள்ளது.



Tags : deaths , Red, Corona, Curfew, Madras
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...