×

தமிழகம் முழுவதும் 5 கூடுதல் எஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை,மே 9: தமிழகம் முழுவதும் 5 கூடுதல் எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருநெல்வேலி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த பி.கே.தியாகராஜ் சென்னை காவலர் பயிற்சி மையம் கூடுதல் எஸ்பியாகவும், தஞ்சை மாவட்டம் தலைமையிடத்தில் இருந்த என்.சிலம்பரசன் கரூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருப்பூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த வி.எம்.பி.ஆசைத்தம்பி கோவை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராகவும், கோவை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக இருந்த எச்.ரமேஸ்பாபு ஆவடி பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்பியாகவும், கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த எம்.கிரிதர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் துணை கமிஷனராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Tags : SPs ,Tamil Nadu ,DGP Tripathi directive. ,DGP Tripathi , Tamil Nadu, 5 Extra SPs, DGP Tripathi Rau
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...