×

விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய கோரி வழக்கு..: பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: விலை பொருட்களை நேரடி கொள்முதல் செய்ய கோரும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கள் சந்தைப்படுத்த முடியாமல் காய்கறிகளும், பழங்களும் வீணாகுவதை தடுக்கு விவசாயிகளிடம் அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பது மனுவின் சாராம்சம்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் முந்தைய உத்தரவு படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதனை கண்டித்த நீதிபதிகள் வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விளைவிற்கும் காய்கறிகளை வாங்க ஆள் இல்லாததால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் கண்ணீர் வீடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : purchase ,farmers Farmers , Case ,direct, purchase ,farmers
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு