×

கொரோனாவால் ரூ. 2,28,000 கோடியை இழந்த ஐரோப்பியாவின் நம்பர் 1 தொழிலதிபர்!!!

லண்டன் : கொரோனா ஊரடங்கால் ஐரோப்பியாவின் நம்பர் 1 பணக்காரரான தொழிலதிபர் பெர்னார்டு அர்னால்டு ரூ. 2,28,000 கோடியை இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டு, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடங்கி வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. கொரோனா தொற்று தாக்கத்தால் பல்வேறு தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்து அதோகதியாகி நிற்கிறார்கள்.

அந்த வகையில் ஐரோப்பியாவின் நம்பர் ஒன் பணக்காரரான பெர்னார்டு அர்னால்டு நிறுவனத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. பாரிஸில் இருக்கும் இவரது LVMH நிறுவனம் DIOR  முதல் Fendi வரை 70க்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்களை உலகம் முழுவதும் விற்கிறது.கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியதை அடுத்து இவரது நிறுவனம் 19 சதவீதம் பங்குகளை இழந்துள்ளது. இதனால் இவரின் வருமானம் 2,28,000 கோடி குறைந்துள்ளது. தனிப்பட்ட நபரின் வருமானம் என்ற அளவில் உலகில் கொரோனாவுக்கு பலி கொடுக்கப்பட்ட அதிகபட்ச வருமானம் இது வாகும். கடந்த 6 ம் தேதி நிலவரப்படி, அமேசான் உரிமையாளர் பிசோஸ்-க்கு கிடைத்த லாபத்தில் அதே அளவுக்கு அர்னால்ட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Businessman ,Europe ,Corona , Corona, Rs. 2,28,000 Crores, Lost, Europe, Number 1, Businessman, Bernard Arnold
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்