×

மயிலாடுதுறையில் மேலும் ரூ.20 கூடுதல் விலை வைத்து கல்லா கட்டிய டாஸ்மாக் ஊழியர்கள்

மயிலாடுதுறை: டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அடுத்து மயிலாடுதுறையில் ஏற்கனவே இருந்த 4 கடைகளில் ஒரு கடையை தவிர 3 கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடந்தது.மயிலாடுதுறை பஸ் நிலையங்களை ஒட்டி 2 கடைகள், மகாதானத்தெருவில் ஒரு கடை என 3 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் கடை முன்பாக அமைக்கப்பட்ட தடுப்பு மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் காலை 10 மணி முதலே மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. யாரும் பேரம் பேசவில்லை.

ரூ.190 விலை கொண்ட பாட்டிலை மேலும் ரூ.20 வைத்து ரூ.210 என விற்க சொல்லி அரசு விலையை உயர்த்தியிருந்தது. டாஸ்மாக் ஊழியர்கள் அதே பாட்டிலை மேலும் ரூ.20 உயர்த்தி ரூ.230க்கு விற்பனை செய்தனர். விலை குறித்து குடிமகன்கள் கேட்கவில்லை. இதனை பயன்படுத்தி வழக்கம்போல அரசுக்கு ரூ.20, தங்களுக்கு ரூ.20 என மது பிரியர்களிடம் விலையை கூட்டி விற்பனை செய்தனர்.

Tags : Mayiladuthurai ,Task staff , Mayiladuthurai, Task staff,kalla
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...