×

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் விஷவாயு கசிவு : நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட மக்கள்;50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டம்

ஹைதராபாத் : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் மீண்டும் வாயு கசிவு வெளியேறியதால் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், தென் கொரிய ரசாயன தொழிற்சாலையிலிருந்து,நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது.  இந்த விஷவாயு ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி, காற்றில் வேகமாகப் பரவியது. சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய இந்த விஷவாயுவால் ஐந்து கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
நள்ளிரவில் மீண்டும் ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து 50க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. வாயு கசிவுவை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். விபத்து ஏற்பட்ட ஆலையில் நள்ளிரவில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

Tags : soldiers ,Poison gas leak ,chemical plant ,Visakhapatnam ,plant ,gas leak , Visakhapatnam, chemical plant, poison gas, leak, people, soldiers, struggle
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி