சென்னை: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவுரங்காபாத் ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த வலியும் வேதனையும் அடைந்ததாக ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார். புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவி வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் சென்று சேருவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.