×

விருதுநகர் அருகே சகோதரியை கொலை செய்த இளைஞர்..: மது விற்பனை தொடங்கிவுடன் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு

விருதுநகர்: தமிழ்நாட்டில் மது கடைகள் திறக்கப்பட்டவுடன் குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கி விட்டது. விருதுநகர் மாவட்டம் திருச்சூழி அருகே இளைஞர் ஒருவர் தனது சகோதரியை குடிபோதையில் அடித்து கொலை செய்துள்ளார். தங்கை அம்சவள்ளியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கணேஷ் பாபு நேற்று டாஸ்மாக் கடை திறந்த உடன் மது அருந்தி விட்டு, வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த கணேஷ் பாபு தாக்கியதில் தங்கை அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தார்.

மேலும் மதுரை அருகே இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமன் என்பவரின் மூன்றது மகன் காளிதாஸ் என்பவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 25 வயதான இவர், தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுவுக்கு அடிமையானவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதுபான கடை திறக்கப்பட்டதும் முதல் ஆளாக சென்று நான்கு பாட்டில் மதுபானம் வாங்கி வீட்டில் வைத்து அருந்தி உள்ளார். மனைவி குழந்தைகள் யாரும் இல்லாத வீட்டில் சுயநினைவை இழந்த காளிதாஸ் செய்வது அறியாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  

இதேபோல் கரூரில் கண்ணன் என்பவர் மீது குடிபோதையில் இருந்த அதிமுகவினர் சில தாக்குதல் நடத்தி உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


Tags : sister ,Virudhunagar , Youth, murdered, sister ,Virudhunagar ..
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...