×

திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி

திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் பள்ளி மாணவி ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மௌனிகா(17). இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு வயலுக்குச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை வயலுக்குச் சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து தடையங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Tags : field ,house ,Thiruvarur , schoolgirl ,dead , field , back ,house , Thiruvarur
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்