×

கிருஷ்ணகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா

சூளகிரி:  தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமாக, கிருஷ்ணகிரி இருந்தது. இந்நிலையில், வேப்பனஹள்ளி அருகே நல்லூர் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு, கொரோனா தொற்று கடந்த 2ம் தேதி உறுதியானது.  இதேபோல், கர்நாடகாவில் காய்கறி, பூ வியாபாரத்திற்கு சென்று வந்த சூளகிரி காமராஜர் நகரைச் சேர்ந்த 2 மூதாட்டிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கடந்த 4ம் தேதி உறுதி செய்யப்பட்டது. 2 மூதாட்டிகளிடமும் தொடர்பில் இருந்த 65 பேர் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் 12 வயது சிறுமி, 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. இவர்கள் 4 பேரும், பாதிக்கப்பட்ட மூதாட்டிகளின் நெருங்கிய உறவினர்கள். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Krishnagiri , Corona ,Krishnagiri
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...