×

தடுப்பூசி வந்தால் கிரிக்கெட்...ரஹானே நம்பிக்கை

மும்பை: கோவிட்-19 நோய்க்கு தடுப்பூசி வந்த பிறகு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கலாம் என்று இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: ஊரடங்கு  பொறுமையை கற்றுத் தந்திருக்கிறது. உடல்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.  மீண்டும் களமிறங்குவதற்கு முன்பு 3 அல்லது 4 வாரங்கள் பயிற்சி  செய்ய வேண்டும். பேட்டிங் செய்யாமல் இருப்பது ஏமாற்றமாகவே இருக்கிறது.  மீண்டும் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் உடல்நலன் முக்கியம். அதனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்தால் தான்  கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு ரஹானே கூறியுள்ளார்.

Tags : Rahane , covid-19, Cricket, Rahane
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!