சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை பற்றியும் தெரிவிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கை மே 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.